Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளாச்சேரியில் தயாராகின்றன ... நகரி தேசம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நகரி தேசம்மன் கோவிலில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1,200 ஆடு, 2 ஆயிரம் கோழியை திண்டுக்கல்லில் விடிய விடிய சமபந்தி விருந்து
எழுத்தின் அளவு:
1,200 ஆடு, 2 ஆயிரம் கோழியை திண்டுக்கல்லில் விடிய விடிய சமபந்தி விருந்து

பதிவு செய்த நாள்

07 ஆக
2019
01:08

திண்டுக்கல், ஆக.7–திண்டுக்கல் முத்தழகுபட்டி செபஸ்தியார் ஆலய திருவிழாவில் 1,200 ஆடு கள், 2 ஆயிரம் கோழிகளை சமைத்து விடிய விடிய சமபந்தி விருந்து நடந்தது.

திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. ஆக.4ல் இங்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் (ஆக.5) புனிதர்களின் தேர் பவனி நடந்தது. நேற்று (ஆக.6) காணிக்கை பவனி நடந்தது.

காலை 8:00 மணி முதல் பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் அரிசி, ஆடு, கோழிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

மாலை 5:00 மணி வரை 1,200 ஆடுகள், 2 ஆயிரம் கோழிகள் காணிக்கையாக வந்தன. இவற்றை மெகா சைஸ் பாத்திரங்களில் சமைத்து, இரவு 7:00 மணி முதல் இன்று (ஆக.7) காலை 5:00 மணி வரை விடிய விடிய சமபந்தி விருந்து நடந்தது. திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராம மக்கள் இதில் பங்கேற்று விருந்து உண்டனர்.

இன்று (ஆக.7) காலை புனிதர்களின் தேர் பவனி, மாலையில் நன்றி வழிபாடு நடக்கிறது.
ஊர் முக்கியஸ்தர்கள் கூறியது: நேர்த்தி கடனாக வந்த அரிசி, ஆடு, கோழியை சமைத்து விருந்து வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் கலந்து கொண்டனர். யாருக்கும் உணவு இல்லை என்று சொல்லாத அளவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டது’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar