சிங்கம்புணரி:சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் சக்தி பூஜை நடந்தது.ஆடி தேர் பிறை பஞ்சமி நடசத்திரத்தன்று சக்தி பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு சனிக்கிழமை இப்பூஜை நடத்தப்பட்டது. நள்ளிரவு 12:00 மணிக்கு சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது. தொடர்ந்து சித்தருக்கு அவரது இஷ்ட தேவதையான வராகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சக்தி பூஜை நடத்தப்பட்டது. விழாவில் சுவாமிக்கு அசைவ உணவு படையல் போடப்பட்டது.நிகழ்ச்சியில் சிங்கம்புணரி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்..