சிவகங்கை:சிவகங்கை புனித அலங்கார அன்னை பேராலயத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பேராலயம் முன் கொடிமரத்தில் நேற்று (ஆக., 6ல்) மாலை 6:30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மறை மாவட்ட பெருளாளர் எம்.சந்தியாகு திருப் பலியை நிறைவேற்றினார். நிகழ்ச்சியில் பங்குத்தந்தையர்கள் மரிய டெல்லஸ், இன்பென்ட் ராஜ், பிரிட்டோ, ஆரோக்கியராஜா பங்கேற்றனர். 9 நாட்கள் நடக்கும் விழாவையொட்டி ஆக.14 ம் தேதி தேர் பவனியும், ஆக. 15 ம் தேதி நன்றி திருப்பலியும் நடக்கிறது.