திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் மதுரைவீரன் கோவில் ஆண்டு பெருவிழா நடக்கிறது. திருக்கோவிலுார், மந்தக்கரை வீதியில் உள்ள, பழமையான மதுரை வீரன் கோவிலில், ஆடி மாத ஆண்டு பெருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் (ஆக., 5ல்) இரவு 8:00 மணிக்கு பாரம்பரிய முறைப்படி பொம்மி சிறை எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (ஆக., 6ல்) இரவு கஜ்வரை கருவறுத்து, வெள்ளையம்மாளை சிறைபிடிக்கும் வைபவம் நடந்தது.இன்று (ஆக., 7ல்) காலை மதுரை வீரனுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்காரம், தீபாராதனை. இரவு 8:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.