பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சுவாதி நட்சத்திரம் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நாமகீர்த்தனம் நடந்தது. ராதை, கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். 108 துளசி பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. குரு அஷ்டோந்திரம், கிருஷ்ண அஷ்டோந்திரம், லட்சுமி அஷ்டோந்திரம் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கிருஷ்ணசைதன்யதாஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். ஏற்பாடுகளை பக்தர்கள் செய்திருந்தனர்.