பதிவு செய்த நாள்
09
ஆக
2019
12:08
சேலம்: சேலம், அம்மாபேட்டையில் முதன் முதலாக ஆடிப் பண்டிகையில் நடந்த செங்குந்தர் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் மாரியம்மன் கோவில் திருத்தேர் திருப்பணி அறக் கட்டளை சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரே இலுப்பை மரத்தால், 27 அடி உயர தேர் செய்யப்பட்டு, 2017, ஆக., 31ல் வெள்ளோட்டம் நடந்தது. கடந்தாண்டு ஆக., 31ல், கோவில் கும்பாபிஷேகம் நடந்ததால், முதல்முறையாக, ஆக., 8ல் தேரோட்டம் நடந்தது. காலை, 8:15 மணிக்கு, வடம் பிடித்து இழுத்து, பக்தர்கள் தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர். செங்குந்தர் மாரியம்மன், தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.