பதிவு செய்த நாள்
09
ஆக
2019
12:08
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதர் கோவிலில், அத்தி வரதர் வைபவத்தையொட்டி வைக்கப்பட்ட சிறப்பு உண்டியல்களில், 37 நாட்களில், 4.90 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1ம் தேதி முதல் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்தி வரதர், ஆக., 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அத்திவரதர் வைபவத்தையொட்டி, பக்தர்களின் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த தற்காலிக சிறப்பு உண்டியல் நிரம்பியவுடன் எண்ணப்பட்டு வருகிறது.அதன்படி, மூன்று உண்டியல், 6ம் தேதியும், 7ம் தேதி, ஐந்து உண்டியல்களும் திறக்கப்பட்டன.ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில், ஒரு உண்டியல், நேற்று (ஆக., 8ல்) திறக் கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.இதில், 1.50 கோடி ரூபாயும், 20 கிராம் தங்கமும், 765 கிராம் வெள்ளியும், காணிக்கையாக கிடைத்துள்ளது.
இதுவரை, 37 நாட்களில், அத்தி வரதர் சிறப்பு உண்டியல்களில் மட்டும், 4.90 கோடி ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.