பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் பொன் அய்யனார் கோவிலில் தெப்பல் உற்ச வம் நடந்தது. ஆடி மாத தெப்பல் உற்சவ திருவிழா கடந்த 3 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் (ஆக., 7ல்) இரவு தெப்ப உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி , திருக்கோவில் குளத்தில் பொன் அய்யனார் வண்ண பூக்களால் அலங் கரிக்கப்பட்டு தெப்பத்தில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.