சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஐந்துகோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பிரான்மலை குன்று வளர்ந்த பிடாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு மங்கைபாகர் கோயில் முன்பிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஐந்து ஊர் மக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர் அதைத்தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இரவு 9:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.