திருப்புத்துார்:திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சுதர்சனஹோமம் நடந்தது.
நேற்று (ஆக., 10ல்) காலை 8:00 மணிக்கு சக்கரத்தாழ்வார் சன்னதியில் பெருமாள், அம்பாள் எழுந்தருளினர். பின்னர் சுதர்சனஹோமம் துவங்கியது. தொடர்ந்து காலை 12:00 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. மாலையில் பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். இரவில் பெருமாள் திருவீதி வலம் வந்தார்.