காரைக்குடி:காரைக்குடி செக்காலை சகாய அன்னை ஆலய விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்கு பாதிரியார் எட்வின்ராயன் தலைமையில் தேவகோட்டை மறைவட்ட பாதிரியார் ஜெக நாதன் அர்ச்சித்து கொடி ஏற்றினார். முன்னதாக ஆலயத்தை சுற்றிலும் கொடி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து பாதிரியார்கள் எட்வின்ராயன், ஜெகநாதன் தலைமையில் திருப்பலி நடந்தது. கிளாட்வின் நன்றி கூறினார்.
விழா நாட்களில் ஒவ்வொரு நாள் மாலை 5:30 மணிக்கு திருச்செபமாலையும், அன்னையின் திருவுருவப்பட பவனியும் மாலை 6:00 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. ஞாயிறு திருப்பலி நற்கருணை விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்று திருப்பலி முடிந்ததும் திவ்ய நற் கருணை பவனி நடக்கிறது. 17-ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருவிழா திருப்பலியும், தேர் பவனி, நற்கருணை ஆசிரும் நடக்கிறது. 18-ம் தேதி காலை 8:15 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.