Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலம் ஓம் சக்தி கோவிலில் பால்குட ... பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆர்.கே.பேட்டை 3 கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு உற்ஸவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2019
03:08

ஆர்.கே.பேட்டை:ஆடி மாதத்தில், அம்மனுக்கு சிறப்பு உற்சவம், அம்மையார்குப்பத்தில் இன்றும் (ஆக., 10ல்), வங்கனுாரில், நாளை மறுதினமும்  (ஆக., 12ல்) துவங்குகிறது.

ஒரே நாளில், மூன்று கோவில்களில், உற்சவம் நடைபெற உள்ளதால், வரும் திங்கட்கிழமை, கிராமம் முழுவதும் வேப்பிலை வாசம் வெளுத்து வாங்கும் என்பது நிச்சயம்.மஞ்சள் அபிஷே கம்அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், உற்சவங்கள், இன்று (ஆக., 10ல்) முதல், ஆர்.கே. பேட்டை வட்டாரத்தில் களை கட்ட துவங்குகின்றன. ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மை யார்குப்பம், காமாட்சியம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது.

இதற்கான பால்குடங்களை, பக்தர்கள், சாது சங்கர மடத்தில் இருந்து, ஊர்லவமாக சுமந்து வர உள்ளனர். நாளை மறுதினம் (ஆக., 12ல்), வங்கனுார், பெரியபாளையத்தம்மன் கோவிலில் சிறப்பு உற்சவம் நடக்கிறது. 108 மஞ்சள் நீர் குடங்கள் அபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

மேலும், திங்கட்கிழமை, வங்கனுாரில் அமைந்துள்ள அன்னியம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், எல்லம்மன் கோவில் ஆகிய மூன்று கோவில்களிலும் ஆடி பொங்கல் வைக்கப் படுகிறது.

அம்மனை குலதெய்வமாக வழிபடும் பக்தர்கள், இந்த விழாவை, சிறப்பாக கொண்டாட உள்ளனர். தண்ணீர் பஞ்சம்ஒரே நாளில், மூன்று அம்மன் கோவில்களில், திருவிழா நடைபெற உள்ளதால், கிராமம் முழுவதும் வேப்பிலை தோரணத்தால் அலங்கரிக்கப்பட உள்ளது.ஆடி மாத கொண்டாட்டம் துவங்கியுள்ள அம்மையார்குப்பம் மற்றும் வங்கனுார் ஆகிய இரண்டு கிராமங்களும், கோடையில், தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. பஞ்சம் தீர வேண்டும் என்பதே பக்தர்களின் வேண்டுதலாக இருக்கும் என, நம்பப் படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar