பதிவு செய்த நாள்
13
ஆக
2019
11:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மலையையே, சிவனாக பாவித்து, பக்தர்கள் வழிபடும் இடம், திருவண்ணாமலை. இங்கு, பவுர்ணமி தோறும், 14 கி.மீ.,க்கு, பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில், ஆடி மாத பவுர்ணமி திதி, நாளை மாலை, 4:35 முதல், 15ம் தேதி மாலை, 6:16 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.