பதிவு செய்த நாள்
13
ஆக
2019
11:08
பல்லடம்: சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, பல்லடம் சிவன் கோவில்களில், பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டனர். பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அன்று விரதமிருந்து பக்தர்கள் சிவனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திங்கட்கிழமை சிவபெருமானை வழிபட சிறந்த நாளாகும். திங்கட்கிழமை அன்று வரும் சோமவார பிரதோஷ நாள், மிக முக்கிய தினமாகும். அன்று, சிவனை வழிபட்டால், தரித்திரம் ஒழிந்து, நோய்கள் நீங்கி, துயரங்கள் மறையும் என்பது பெரியோர்களின் வாக்கு.
நேற்று, சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, பல்லடம் பொங்காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை, 3.30 மணி முதல் இளநீர், பால், தயிர், மஞ்சள், தேர்தல் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிவபெருமான், மற்றும் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 4.30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், சித்தம்பலம் நவகிரக கோட்டை, மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும், சோமவாரம் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.