நகரி:நகரி அடுத்த, சிந்தாலப்பட்டடா கிராமத்தில் உள்ள, பெரியபாளையம், பவானி அம்மன் கோவிலில், ஆடிப்பூர உற்சவம் விமரிசையாக நடந்தது.நேற்று முன்தினம் (ஆக., 11ல்) காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
2,000க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இரவு, 8:00 மணிக்கு, பவானி அம்மன் உற்சவராக எழுந்தருளி, சிந்தாலப்பட்டடா கிராம வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆடிப்பூரா விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.