நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் சிவன் கோவில்களில் நேற்று (ஆக., 12ல்) பிரதோஷ பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் சொக்கநாதர், மலையாண்டவர் என்கிற ராஜ ராஜேஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று (ஆக., 12ல்) பிரதோஷ பூஜை நடந்தது. நேற்று (ஆக., 12ல்) மாலை 4:00 மணிக்கு விநாயகர், பிரதோஷ நாயகர்,நந்தி,ஈஸ்வரர்,அம்மன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
மாலை 5:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பிரதோஷ நாயகர் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.