திருவாடானை: ஆக.13-திருவாடானை அருகே கட்டுகுடி கிராமத்தில் தேவிகருமாரியம்மன் கோயில் திரு விழா நடந்தது. கோயில் முன்பு பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மக்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அதே கிராமத்தை சேர்ந்த கோட்டைமுத்து மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.