பதிவு செய்த நாள்
13
ஆக
2019
03:08
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், செல்லாண்டியம்மன் கோவில் தேர் திருவிழா வரும், 15ல் நடக்கிறது. கடந்த, 6ல், காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மறுநாள், கருப்பண்ண சுவாமி பூஜை, நேற்று (ஆக., 12ல்) கன்னிமார் சுவாமி பூஜை நடந்தது.
இன்று (ஆக., 13ல்) காலை, 7:00 மணிக்கு, அரண்மனை பொங்கல் மற்றும் சக்தி அழைத்தல்; நாளை (ஆக., 14ல்) காலை, 7:00 மணிக்கு, ஊர் பொங்கல், மாலை, 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது.
வரும், 15ல், தேர் திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது. முக்கிய பிரமுர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்துள்ளனர்.