டயோஜினிஸ் என்னும் தத்துவ ஞானி இருந்தார். ஏழ்மையில் வாடிய அவர் ஒருநாள் தன் உணவுக்காக அவரைக்காய் சூப் தயாரிக்க இருந்தார். அதற்காக காய்களை கழுவியபோது. ’அரிஸ்டிபஸ்’ என்னும் விஞ்ஞானி வந்தார். அவர் கிரேக்க மன்னரை புகழ்ந்து, அவ்வப்போது பணம் பெறுவார். விஞ்ஞானியாக இருந்து சம்பாதித்ததை விட, இப்படி சம்பாதித்ததே அதிகம். அவர் டயோஜினிஸ் மீது பரிதாபப்பட்டு, ”தத்துவ ஞானியே! என்னைப் போல் நீங்களும் மன்னரை அனுசரித்து நடந்தால், சாதாரண சூப்புக்காக அவரைக்காய்களை கழுவிக் கொண்டிருக்கும் தேவை இருக்காது,” என்றார். அதற்கு டயோஜினிஸ், ”எளிமையாக சூப் குடிக்கப் பழகியிருந்தால், நீங்களும் மன்னரை அண்டிப் பிழைக்கும் கேவலம் ஏற்பட்டிருக்காது” என்றார். விஞ்ஞானியின் முகத்தில் ஈயாடவில்லை. ’வாழ்க்கை சற்று நேரம் தோன்றி மறைந்து போகும் புகை. வாழ்நாட்கள் புற்களுக்கு ஒப்பானவை. எனவே பிழைப்புக்காக அற்ப செயல்களில் ஈடுபடக் கூடாது.