மானாமதுரை: கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகளின் 162வது அவதார விழா, கட்டிக்குளம், கருப்பனேந்தல் மடம், தவச்சாலையில் இன்று சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு தான் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமியின் முதல் ஜீவ ஒடுக்கமான இடமாகும். அத்துடன் சீடர் இருளப்ப கோனாரின் மரணத்தேதியை மாற்றியமைத்ததும் இங்கு தான்.
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதார திருவிழாவில் இன்று (ஆக.,14) காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணிக்குள் சிவாச்சாரியார்களால் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூர்ணாகுதி பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானத்துடன் நடைபெற உள்ளது. இரவு 8:00 மணிக்கு மாயாண்டி சுவாமி வீதிவுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கட்டிக்குளம் கிராமத்தினர் செய்து வருகின்றர்.