பதிவு செய்த நாள்
14
ஆக
2019
11:08
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, செந்தில் நகரில் உள்ள வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில், ஆடி, 28ம் நாளை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இக்கோவிலில் ஆடிமாத, 28ம் நாளை முன்னிட்டு, முனியப்பன் சுவாமிக்கு, முப்பூஜைகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு கணபதி யாகம் நடந்தது. 8:00 மணிக்கு, சுவாமிக்கு பல்வேறு அபி?ஷகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ராஜா அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பின், சுவாமிக்கு திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.