Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அத்தி வரதரை வைக்கும் மண்டபம் ... திருப்புத்துார் பூமாயி அம்மனுக்கு பால்குடம் திருப்புத்துார் பூமாயி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாப்பூரில் ஆடிப்பொங்கல் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
காளாப்பூரில் ஆடிப்பொங்கல் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
12:08

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் ஆடிப்பொங்கல் விழாவையொட்டி ஒரே இடத்தில் நுாறு கிடா, இரண்டாயிரம் ஆயிரம் கோழிகள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இங்குள்ள பழமையான வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி செவ்வாய் அன்று ஆடிப்பொங்கல் விழா  கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று இந்த விழா கிராம மக்களால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கோயில் திடலுக்கு வந்து ஆடு, கோழிகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பலியிட்டனர். அந்த இடத்திலேயே பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதில் நுாறுக்கும் மேற்பட்ட ஆடுகளும்,இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும் பலியிடப்பட்டன. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

விழாவில் அ.காளாப்பூர், கல்லம்பட்டி, கரடிபட்டி, மூவன்பட்டி, முறையூர், சூரக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஆடிப் பொங்கலையொட்டி இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கறிவிருந்து நடந்தது. எஸ்.வி.மங்கலத்திலும் வழிபாடு சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம் ஆடிப்பொங்கல் விழாவையொட்டி ஆடு ,கோழிகள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இங்குள்ள அழகுநாச்சி அம்மன் அம்மன் கோயிலில் ஆடி கடைசி செவ்வாய்க் கிழமையான நேற்று ஆடிப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காலை 9:00 மணிமுதல் மாலை 6:00 மணி வரை இப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கோயில் திடலுக்கு வந்து ஆடு, கோழிகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பலியிட்டனர். அந்த இடத்திலேயே பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் எஸ்.வி.மங்கலம் கிராம மக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar