சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் ஆடிப்பொங்கல் விழாவையொட்டி ஒரே இடத்தில் நுாறு கிடா, இரண்டாயிரம் ஆயிரம் கோழிகள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இங்குள்ள பழமையான வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி செவ்வாய் அன்று ஆடிப்பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று இந்த விழா கிராம மக்களால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கோயில் திடலுக்கு வந்து ஆடு, கோழிகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பலியிட்டனர். அந்த இடத்திலேயே பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதில் நுாறுக்கும் மேற்பட்ட ஆடுகளும்,இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும் பலியிடப்பட்டன. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
விழாவில் அ.காளாப்பூர், கல்லம்பட்டி, கரடிபட்டி, மூவன்பட்டி, முறையூர், சூரக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஆடிப் பொங்கலையொட்டி இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கறிவிருந்து நடந்தது. எஸ்.வி.மங்கலத்திலும் வழிபாடு சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம் ஆடிப்பொங்கல் விழாவையொட்டி ஆடு ,கோழிகள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இங்குள்ள அழகுநாச்சி அம்மன் அம்மன் கோயிலில் ஆடி கடைசி செவ்வாய்க் கிழமையான நேற்று ஆடிப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காலை 9:00 மணிமுதல் மாலை 6:00 மணி வரை இப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கோயில் திடலுக்கு வந்து ஆடு, கோழிகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பலியிட்டனர். அந்த இடத்திலேயே பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் எஸ்.வி.மங்கலம் கிராம மக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.