Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அத்தி வரதரை வைக்கும் மண்டபம் ... திருப்புத்துார் பூமாயி அம்மனுக்கு பால்குடம் திருப்புத்துார் பூமாயி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாப்பூரில் ஆடிப்பொங்கல் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
காளாப்பூரில் ஆடிப்பொங்கல் விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2019
12:08

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் ஆடிப்பொங்கல் விழாவையொட்டி ஒரே இடத்தில் நுாறு கிடா, இரண்டாயிரம் ஆயிரம் கோழிகள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இங்குள்ள பழமையான வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி செவ்வாய் அன்று ஆடிப்பொங்கல் விழா  கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று இந்த விழா கிராம மக்களால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 6:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கோயில் திடலுக்கு வந்து ஆடு, கோழிகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பலியிட்டனர். அந்த இடத்திலேயே பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதில் நுாறுக்கும் மேற்பட்ட ஆடுகளும்,இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளும் பலியிடப்பட்டன. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

விழாவில் அ.காளாப்பூர், கல்லம்பட்டி, கரடிபட்டி, மூவன்பட்டி, முறையூர், சூரக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஆடிப் பொங்கலையொட்டி இப்பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கறிவிருந்து நடந்தது. எஸ்.வி.மங்கலத்திலும் வழிபாடு சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம் ஆடிப்பொங்கல் விழாவையொட்டி ஆடு ,கோழிகள் பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இங்குள்ள அழகுநாச்சி அம்மன் அம்மன் கோயிலில் ஆடி கடைசி செவ்வாய்க் கிழமையான நேற்று ஆடிப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. காலை 9:00 மணிமுதல் மாலை 6:00 மணி வரை இப்பகுதி மக்கள் குடும்பத்துடன் கோயில் திடலுக்கு வந்து ஆடு, கோழிகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பலியிட்டனர். அந்த இடத்திலேயே பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் எஸ்.வி.மங்கலம் கிராம மக்கள் பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar