திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மனுக்கு ஆடி செவ்வாயை முன்னிட்டு நேற்று பக்தர்கள் பால் குடம் எடுத்தனர். நேற்று காலை 9:00 மணிக்கு தென்மாப்பட்டு அக்கசாலை விநாயகர் கோயிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக பூமாயி அம்மன் கோயில் வந்தனர்.அம்மனுக்கு பாலாபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. சர்வ அலங்காரத்தில் அம்மனை பக்தர்கள் தரிசித்தனர். இன்று தென்மாப்பட்டு சவுக்கை திடலிலிருந்து முளைப்பாரி எடுத்து பக்தர்கள் அம்மனை வழிபடுகின்றனர். தொடர்ந்து அக்கசாலை விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகிறது.