Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் தேர்த்திருவிழா ... தூத்துக்குடி வேங்கடாசலபதி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் பங்குனிவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2012
11:03

திருவட்டார் : திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தென்னிந்தியாவின் வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் இந்த ஆண்டைய பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் காலை ஹரிநாம கீர்த்தனை நடந்தது. மாவட்ட தேவஸ்தான தந்திரி மாத்தூர்மடம் சங்கரநாராயணரு திருக்கொடியேற்றினார். கோயில் நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை தீபாராதனை, ராமாயண பாராயணம், சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடந்தது. இரண்டாம் நாளான இன்று முதல் நான்காம் நாள் வரை காலை ஸ்ரீமத் பாகவத பாராயணம், சுவாமி பவனி வருதல், தீபாராதனை, ராமாயண பாராயணம், சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு கதைகளி நடக்கிறது. ஐந்தாம் நாள் ஸ்ரீமத் பாகவத பாராயணம், சிறப்பு உற்சவபலி தரிசனம், தீபாராதனை, ராமாயண பாராயணம், இரவு ஆத்மிக அரங்கம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஐயப்பன் தலைமை வகிக்கிறார். ஆதிகேசவ பக்தர் சங்க நிர்வாகி தங்கப்பழம் வரவேற்கிறார். நாராயணன் நாயர், ராஜேந்திரன் முன்னிலை வகிக்கின்றனர். தொல்லியல்துறை முன்னாள் இயக்குனர் ராமசந்திரன், பாலசந்தர், ஜெயசீலன், பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஆதிகேசவ பெருமாள் அருள்மாலை வெளியிடப்படுகிறது. சிவசங்கரன் நன்றி கூறுகிறார். தொடர்ந்து திருவம்பாடியில் திருக்கொடியேற்று, பஜனை, சுவாமி கருட வாகனத்தில் பவனி வருதல், கதைகளி நடக்கிறது. ஆறாம் நாள் ஸ்ரீமத் பாகவத பாராயணம், சிறப்பு உற்சவபலி தரிசனம், தீபாராதனை, ராமாயண பாராயணம், இரவு ஓட்டன்துள்ளல், சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், கதைகளி நடக்கிறது. ஏழாம் நாள் காலை ஸ்ரீமத் பாகவத பாராயணம், சிறப்பு உற்சவபலி தரிசனம், தீபாராதனை, ராமாயண பாராயணம், இரவு சமய சொற்பொழிவு, சுவாமி பல்லக்கில் பவனி வருதல், கதைகளி, எட்டாம் நாள் காலை ஸ்ரீமத் பாகவத பாராயணம், சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தீபாராதனை, கதைகளி நடக்கிறது. ஒன்பதாம் நாள் காலை ஸ்ரீமத் பாகவத பாராயணம், தீபாராதனை, இரவு சிறப்பு நாதஸ்வர இன்னிசை, கருட வாகனத்தில் சுவாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல், கதைகளி, பத்தாம் நாள் காலை சுவாமி பவனி வருதல், எழுந்தருளல், மாலை சுவாமி கருட வாகனத்தில் ஆறாட்டிற்கு மூவாற்றுமுகம் எழுந்தருளல், தீபாராதனை, சிறப்பு நாதஸ்வர இன்னிசை, வாணவேடிக்கை, கதைகளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar