பதிவு செய்த நாள்
14
ஆக
2019
02:08
மணலி:அம்மன் கோவில்களில், ஆடித் திருவிழாவைஒட்டி, பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மணலி, சடையங்குப்பத்தில், கங்கையம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் (ஆக., 14ல்) மாலை, ஆடி மாதம், நான்காம் வாரத்தை முன்னிட்டு, தீ மிதி திருவிழா நடந்தது. சிறப்பு அலங் கார வாகனத்தில், உற்சவ தாயார் எழுந்தருளினார்.தீச்சட்டி, முளைப்பாரி, அலகு வேல், கூண்டு வேல், ராட்சத வேல் அணிந்து, பக்தர்கள் அணிவகுத்தனர்.
நிறைவாக, பக்தர்கள், தீ மிதித்து, நேர்த்திக் கடனை செலுத்தினர்.பிரித்யங்கரா தேவிதிரு வொற்றியூர், கார்கில் வெற்றி நகர், பிரித்யங்கரா தேவி கோவிலில், 10 நாள் ஆடித் திருவிழா வின், நிறைவு நாளான, நேற்று முன்தினம் (ஆக., 12ல்) இரவு, தீ மிதி திருவிழா நடந்தது.
அலகு வேல், கூண்டு வேல், ராட்சத வேல் அணிந்து வந்த, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.பாதுகாப்பு குறைபாடு காரணமாக, ஒரே நேரத்தில், இருவர் தீ மிதிக்க அனுமதிக்கப்பட்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், தடுப் புகளை மீறி சிலர், அக்னி குண்டத்தை சூழ்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, தீ மிதி த்த, 35 வயது மதிக்கத்தக்க பெண் பக்தர் ஒருவர், அக்னி குண்டத்தில் நிலைதடுமாறி விழுந்த தால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின், தீயில் விழுந்த பெண்ணை, காயங்களுடன் மீட்டனர்.