பதிவு செய்த நாள்
14
ஆக
2019
02:08
காஞ்சிபுரம்: அத்தி வரதரை தரிசிக்க, கார், வேன், பஸ்களில் சென்றால் காலதாமதம் ஆவதால், வெளிமாவட்டத்தை சேர்ந்தோர், இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெறுகிறது.வைபவம், 17ம் தேதி முடிந்தாலும், 16ம் தேதி வரை மட்டுமே, அத்தி வரதரை தரிசிக்க அனுமதி என்பதால், காஞ்சிபுரம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால், காஞ்சிபுரம் நகருக்கு வெளியே, கூடுதலாக மூன்று இடங்களில் பிரம்மாண்ட தங்கு மிடம் அமைக்கப்பட்டு உள்ளன. வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள், நகருக்குள் செல் லாமல், பக்தர்கள் தங்குமிடம் அருகில், ’பார்க்கிங்’ செய்துவிட்டு, பஸ் மூலம், கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், வெளிமாவட்டத்தை சேர்ந்த பலர் கார், வேன்களில் செல்வதை தவிர்த்து இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் வருகின்றனர்.திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணா மலை என, வெளிமாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா என வெளிமாநிலம் பதிவு எண் உடைய இரு சக்கர வாகனங்களை, காஞ்சிபுரத்தில் அதிகளவில் காண முடிகிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த பக்தர்கள் தீபக்ராஜன் கூறியதாவது: கார், வேன் போன்ற வாகனங்களில் வந்தால், போக்குவரத்து நெரிசல் மற்றும் தங்கும் இடங் களில் பல மணிநேரம் காத்திருந்து, சுவாமியை தரிசிக்க வேண்டிஉள்ளது.அதேபோல் அரசு பஸ்களில் சென்றாலும், கோவிலுக்கு செல்லும் மினி பஸ்களில் கூட்ட நெரிசல் உள்ளது. ஆட்டோவில் டிரைவர்களும் அடாவடி கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், நானும், என் நண்பனும், பைக்கில் காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.