Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் ... மயிலாப்பூர் சங்கர மடத்தில் பூணுால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை நாளை திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2019
03:08

சபரிமலை : ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கிறது. ஆக. 17ல் அடுத்த மண்டல காலம் முதல் ஒரு ஆண்டுக்கான புதிய மேல்சாந்தி குலுக்கல் தேர்வு நடக்கிறது.

நாளை மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு விபூதி வழங்குவார். பின்னர் மேல்சாந்தி 18ம் படி வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து கோயிலுக்கு திரும்பியதும், பக்தர்கள் 18ம் படி வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.ஆக.17 அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம் நடத்திய பின்னர் நெய்யபிேஷகத்தை தொடங்கி வைத்து கணபதிேஹாமம் நடத்துவார்.

ஆவணி மாத பூஜைகள் ஆக. 21 வரை நடைபெறும். அன்று சகஸ்ரகலச பூஜை நடைபெறும். எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். இரவு 10:00 மணிக்கு அடைக்கப்படும். திருவோண பூஜைகளுக்காக நடை செப்., 9 மாலை 5:00 மணிக்கு திறக்கும். செப்.13 இரவு 10:00 மணிக்கு அடைக்கப்படும்.தமிழ்நாட்டில் ஆவணி ஒன்றாம் தேதி ஆக.18 ல் வருகிறது. கேரளாவில் ஆவணி ஒன்றாம் தேதி ஆக.17-ல் வருவது குறிப்பிடத்தக்கது .மேல்சாந்தி தேர்வில் மாற்றம்ஆக.17 காலை 7:30 மணிக்கு உஷபூஜைக்கு பின்னர் புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெறும்.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத்தேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட்ட ஒன்பது பேர் பட்டியலில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்.இந்த முறையில் சபரிமலை மற்றும் மாளிகைப்புறத்துக்கு தேர்வு செய்யப்படும் மேல்சாந்திகள் புரட்டாசி ஒன்றாம் தேதி முதல் 30-ம் தேதி வரை சபரிமலையில் தங்கியிருந்து தியானம் செய்ய வேண்டும். சபரிமலை விஷயங்களை கூடுதலாக தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ஆண்டு முதல் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பொறுப்பேற்றுக் கொள்வர். கடந்த ஆண்டு வரை குலுக்கல் தேர்வு ஐப்பசி ஒன்றாம் தேதி நடத்தப்பட்டு வந்தது. தற்போது அது ஆவணி மாதம் ஒன்றாம் தேதிக்கு மாற்றி தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar