ஊட்டி :ஊட்டி எம்.பாலாடா ஆனந்தமலை முருகன் கோவிலில் லட்சுமி பூஜை நடந்தது. ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு கிராமத்தில் உள்ள ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை, ஏழு ஹெத்தையம்மனுக்கு மாதாந்திர பூஜை நடந்தது. காலை ஆனந்தமலை முருகனுக்கு அபிஷேக பூஜையும், சித்தி செல்வ விநாயகருக்கு அலங்கார பூஜை, நவக்கிரக தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக தயானந்த சரஸ்வதி தர்ம ரக்ஷண சமிதி சார்பில் லட்சுமி பூஜை நடந்தது. மாவட்ட செயலாளர் கணேஷ மூர்த்தி தலைமை வகித்தார். தொடர்ந்து தஞ்சையை சேர்ந்த ஆனந்த சித்தர், சாந்திவனம் மடாலயம் அன்பு சுந்தர சுவாமி ஆகியோரின் பஜனை இடம் பெற்றது. ஏற்பாடுகளை ராமச்சந்திரன் செய்திருந்தார்.