பதிவு செய்த நாள்
17
ஆக
2019
01:08
இந்த மாதம் குரு 7ம் இடத்தில் நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார். சுக்கிரன் செப்.10 வரை 4-ம் இடத்தில் இருப்பதால் மதிப்பு, மரியாதை உயரும். உறவினருடன் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். அதன் பின் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். புதன் ஆக.21 வரை சாதகமற்ற நிலையில் இருப்பதால் அக்கம் பக்கத்தினரால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. அதன் பிறகு 4ம் இடத்தில் இருந்து நற்பலனைக் கொடுப்பார். அவரால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆனால் செப்.7 க்கு பிறகு அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். அப்போது அவரால் சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். அலைச்சல் அதிகரிக்கும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருப்பதால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். பணியாளர்களுக்கு பணி உயர்வை தருவார்.
சுக்கிரனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார வளம் பெருகும். மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். ஆக.21க்கு பிறகு புதனால் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆக.23,24,25ல் சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர். அவர்களால் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என செல்வீர்கள். ஆக.18,19,20, செப்.15,16 ல் உறவினர் வருகையும்
அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஆக.30,31ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். செப்.7க்கு பிறகு கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். அரசு பணியாளர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும். ஆக.21க்கு பிறகு திறமைக்கு ஏற்ப கவுரவம் கிடைக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்கள் நற்பலனை காணலாம். சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் ஆதரவால் கோரிக்கைகள் நிறைவேறும். ஆனால் பெண்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். செப்.12,13,14ல் திடீர் நன்மையை எதிர்பார்க்கலாம். செப்.7க்கு பிறகு வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை வரலாம்.
வியாபாரிகளுக்கு பகைவர் வகையில் இருந்த இடையூறு, அரசு வகையில் ஏற்பட்ட அனுகூலமற்ற போக்கு முதலியன ஆக.21க்கு பிறகு மறையும். அதுவரை வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும். அதன் பிறகு புதனால் முன்னேற்ற பாதையில் செல்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். செப்.3,4 ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் பிறக்கும். ஆக.21,22,26,27, செப்.17ல் சந்திரனால் முயற்சியில் தடை ஏற்படும். செப்.7 க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும். தொழில்ரீதியாக பயணம் செல்ல நேரிடும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்களுக்கு பெண்களிடம் விரோதம் ஏற்படலாம் கவனம்.
மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து ஆக.21க்கு பிறகு விடுபடுவர். புதனால் சிறப்பான நன்மை கிடைக்கப் பெறுவர். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறுவர்.
விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகலாம். மஞ்சள், காய்கறிகள், கீரை வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். ஆக.21க்கு பிறகு கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். உங்களால் குடும்பத்திற்கு பெருமை சேரும். நகை வாங்க யோகமுண்டு. ஆக.28,29ல் ஆடை, அணிகலன் சேரும். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும்.
* நல்ல நாள்: ஆக.18,19, 20, 23, 24,25, 28,29, செப்.3,4, 5,6,12, 13,14,15,16
* கவன நாள்: செப்.7,8,9 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,7
* நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்:
● தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
● சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு
● செவ்வாயன்று முருகனுக்கு நெய் தீபம்