வடமதுரையில் சவுந்தரராஜப் பெருமாள் கோயில் முத்துப்பல்லக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2019 03:08
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்றிரவு வசந்தம் முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
இக்கோயிலில் இந்தாண்டு ஆக.7-ல் துவங்கிய ஆடித்திருவிழா வரும் 19-ம் தேதி வரை நடக் கிறது. நாள்தோறும் மண்டகபடிதாரர் வழிபாட்டில் அனுமார், அன்ன, சிம்ம, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை, ஊஞ்சல் கருட, விடையாத்தி குதிரை என பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக ஆக.13ல் திருக்கல்யாணம், நேற்றுமுன்தினம் (ஆக., 15ல்)மாலை தேரோட்டம் நடந்தது. 13 நாள் திருவிழாவில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்கும் வசந்தம் முத்துப்பல்லக்கு இன்றிரவு ஆக.17ல் நடக்கிறது.
சன்னதியில் இருந்து முத்துப்பல்லக்கில் புறப்படும் சுவாமி, இரவு முழுவதும் நகரை வலம் வந்து நாளை அதிகாலை சன்னதி திரும்புவார். விழா ஏற்பாட்டினை இந்துசமய அறநிலையத் துறையினர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.