பதிவு செய்த நாள்
17
ஆக
2019
03:08
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, அன்னசாகரம் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழாவில், நேற்று 16ம் தேதி , அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தர்மபுரி அடுத்த, அன்னசாகரத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மனுக்கு நேற்று முன்தினம் 15ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு, அம்ம னுக்கு புடவை படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று 16ம் தேதி காலை, 7:00 மணிக்கு, அங்காள ம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, இக்கோவிலுக்கு, பூக்கூடை அழைப்பு நடந்தது.
பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வரை, திரளான பெண்கள் பங்கேற்று, பூ கூடைகளை சுமந்து, வீதி உலா வந்தனர். மாலை, 5:00 மணிக்கு, பெரியாண்டிச்சி அம்மன், பல்வேறு வகையான பூக் களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.