பதிவு செய்த நாள்
17
ஆக
2019
04:08
திருப்போரூர் : நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில், ஆடி ஐந்தாம் வார விழா, நாளை நடைபெறுகிறது.திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில், புகழ்பெற்ற, வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், இந்தாண்டு ஆடிப்பெருவிழா, ஜூலை, 21ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நாளை 18ம் தேதி, ஆடி ஐந்தாம் வார விழா கோலாகலமாக நடைபெறுகிறது.விழாவை ஒட்டி, காலை, 10:00 மணிக்கு, விசேஷ மகா அபிஷேகம், மலர் அர்ச்சனை, ஊஞ்சல் சேவை வைபவம் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.