கருங்குழி : கருங்குழி ராகவேந்திரர் பிருந்தாவனத்தில், ஆடி மாத பவுர்ணமி பூஜை, சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு சத்யநாராயண பூஜையும், 61வது பவுர்ணமி தரிசனமும் நடைபெற்றது. பக்தர்கள், புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மஹா தீப ஆராதனை யில், சென்னை, பெங்களூரு, புதுவை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சுவாமியை வழிபாடு செய்த பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.