கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.அதனையொட்டி காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் காயத்திரி ஜபமும், உற்சவர் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வைத்து பூஜைகள் செய்தனர். விஸ்வக் சேனர் வழிபாடு, பகவத் பிரார்த்தனை செய்து காலை முதல் மாலை 6:00 மணி வரை ஏகதின லட்சார்ச்சனையை லலிதா சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து அர்ச்சனை செய்தனர்.இரவு தயாருக்கு சிறப்பு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவில் அர்ச்சகர் தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் வைபவத்தை நடத்தி வைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.