திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த வாணியந்தாங்கல் கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலில், தீ மிதி திருவிழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவண்ணாமலை அடுத்த, வாணியந்தாங்கலில் உள்ள ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி வெள்ளி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா ஆக., 10ல், தொடங்கி நடந்து வந்தது. விழாவில், நேற்று முன்தினம் இரவு தீ மிதி விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வழிபட்டனர்.