பதிவு செய்த நாள்
18
ஆக
2019
12:08
ஓசூர்: ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில், ஸ்ராவன மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில், தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மாத புரட்டாசி போலவே, தெலுங்கு மக்கள் ஸ்ராவன மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் அம்மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமையும் பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான மூன்றாவது ஸ்ராவன சனிக்கிழமையை முன்னிட்டு, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.