பதிவு செய்த நாள்
19
ஆக
2019
12:08
பழநி: பழநி மலைக்கோயிலில் ஆவணி மாதபிறப்பை முன்னிட்டு, ஆனந்தவிநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதிஹோம், யாகபூஜை நடந்தது. கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில், விநாயகருக்கு தீபாராதனை நடந்தது. மலைக்கோயிலில அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் ‘ரோப்கார்’ இயங்காததால் வின்ச் ஸ்டேசனில் 2 மணி நேரம் வரை காத்திருந்தனர். பொதுதரிசன வழியில் ஒரு மணி நேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர். திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மாதப்பிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது.
திண்டுக்கல்: திண்டுக்கல் கோயில்களில் ஆவணி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன், வெள்ளை விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலில் ஆவணி பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.