பதிவு செய்த நாள்
19
ஆக
2019
12:08
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நாமக்கல்லில், வரலாற்று சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று, ஆவணி முதல் ஞாயிறையொட்டி, வடை மாலை அலங்காரம், நல்லெண்ணெய், சீயக்காய், மஞ்சள், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருள்களால் சுவாமிக்கு அபி?ஷகம் நடந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், துளசி மாலை சாற்றப்பட்டது. சிறப்பு பஜனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், விட்டலபுரி பாண்டுரங்கர், ராமர், புத்தர் வீதி நடன விநாயகர், தட்டான்குட்டை புருஷோத்தம பெருமாள், திருவள்ளுவர் நகர் சவுந்தரராஜ பெருமாள், கள்ளிபாளையம் பெருமாள் ஆகிய கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.