பதிவு செய்த நாள்
19
ஆக
2019
01:08
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் விஜர்சன ஊர்வலத்திற்காக, சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் பசுமையான விநாயகர் சிலைகளை காஞ்சிபுரத்தை சேர்ந்த கலைஞர்கள் தயாரித்து வருகின்றனர்.
பிள்ளையார்பட்டி அருகே மில் வளாகத்தில் இதற்காக இடம் தேர்வு செய்துள்ளனர். அங்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நீர்நிலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத் தாத, பசுமை விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு அனுமன், கருடாழ்வார், மயில், ரிஷபம், மூஷிகதேர் வடிவம் உட்பட 30 வகையான சிலைகளை தயாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் இருந்து சிலை வடிவங்களை தனித்தனியாக கொண்டு வருகின்றனர். இங்கு அனைத்தையும் ஒன்றினைத்து வர்ணம் தீட்டி விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கின்றனர். தென்மாவட்டங்களில் சதுர்த்திக்காக விநாயகர் விஜர்சன ஊர்வலம் இந்து முன்னணி, பா.ஜ., உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இதற்காக, தென்மாவட்டத்தில் வினியோகம் செய்வதற்காக பிள்ளையார்பட்டியில் சிலைகள் தயாரிக் கின்றனர்.
இது குறித்து இந்து முன்னணி சிவகங்கை மாவட்ட தலைவர் செந்தில்பாண்டி கூறியதாவது, மாவட்ட அளவில் ஊர்வலத்திற்கு பயன்படுத்த 200 சிலைகள் தயாராகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி காகிதக்கூழ், கிழங்கு மாவு, வாட்டர் கலர் கொண்டு தயாரிக் கின்றனர். ‘பிளாஸ்டர் ஆப் பாரீஸ்’ சிலைக்கு தடை விதிக்கும் நோக்கில் பசுமை விநாயகர் சிலைகள் தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் சிலைகளின் உயரத்திற்கேற்ப அதன் விலை 3 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது, என்றார்.