சிங்கம்புணரி குலதெய்வத்தை வழிபட பாரம்பரிய மாட்டுவண்டி பயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2019 01:08
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இருந்து திருக்கோலக்குடிக்கு பல ஆண்டுகளாக மணப்பட்டி மக்கள் குலதெய்வ கோயிலுக்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.
சிங்கம்புணரியில் இருந்து 40 கி.மீ., துாரத்தில் திருக்கோலக்குடி. இங்குள்ள குலதெய்வத்தை வழிபட சிவபுரிப்பட்டி விநாயகர் கோயிலில் இருந்து மணப்பட்டி கிராமத்தினர் 18 மாட்டு வண்டிகளில் பூஜை பொருட்களுடன் பாரம்பரிய முறைப்படி பயணம் செய்தனர். கோயில் நேர்த்தி கடனாக 60 ஆடுகளை பலியிட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதே மாட்டு வண்டிகளில் கிராமத்திற்கு திரும்பினர்.
இது குறித்து பக்தர் மதிசூடியன் கூறியதாவது, ஆடி மாதம் குலதெய்வ வழிபாடு செய்வோம். வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் ஆடி திருவிழாவின் குலதெய்வத்தை வழிபட இங்கு வந்துவிடுவர். பாரம்பரிய முறைப்படி திருவிழா கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து பழைய முறைகளை கடைபிடித்து, குலதெய்வத்தை வழிபட்டு வருகிறோம், என்றார்.