சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அனியம்பட்டியில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு 19 புரவிகள் ஊர்வலம் நடந்தது.
இங்குள்ள அகரத்துார் அய்யனார், எழுவிஅம்மன் கோயிலில் ஆக.,9 ல் காப்புகட்டுடன் புரவி எடுப்பு விழா துவங்கியது. மண்குதிரைகள் செய்ய கிராமத்தார்கள் 48 நாட்களுக்கு முன்பு பிடிமண் கொடுத்தனர். அதன் மூலம் 2 அரண்மனை புரவி, 1 ஐந்து கரை புரவியும், 1 அனியம்பட்டி கிராம புரவியும், 15 நேர்த்திக்கடன் புரவியும் செய்திருந்தனர்.
நேற்று முன்தினம் (ஆக., 17ல்) அனியக்கண்மாய் புரவி பொட்டலில் சிறப்பு வழிபாடு நடத்தி, மாலை 6:30 மணிக்கு புரவிகள் புறப்பட்டு கோவிலை அடைந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆடுகளை பலியிட்டு வழிபட்டனர்.