சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடிப்பூர கஞ்சி கலைய ஊர்வலம் நடந்தது.
நியூகாலனி மன்றத்தில் இருந்து நேற்று 18ம் தேதி காலை 10:00 மணிக்கு செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலையம், முளைப்பாரி, அக்னிசட்டி, பால்குடம், ஆயிரங்கண் பானை, சந்தனக்குடம் போன்றவற்றை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு நேர்த்தி செலுத்தினர். சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கினர்.