பதிவு செய்த நாள்
19
ஆக
2019
03:08
சென்னிமலை: சென்னிமலை, அருணகிரிநாதர் வீதியில், ராகவேந்திரா பக்த சேவா சமிதி அமைந்துள்ளது. இங்கு, ராகவேந்திரர், 348வது ஆராதனை விழாவையொட்டி, ராகவேந்திரர் வெள்ளி விக்கிரகத்துக்கு, நேற்று 18ல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, கூட்டு வழிபாடு மற்றும் ஆசி வழங்குதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், ஈரோடு, ராகவேந்திரர் கோவிலில், சீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.