Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழக்கரை கொம்பூதி கண்ணபிரான் ... உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி அருகே, சிங்க வாகனத்தில் சிம்மாசனம்: வரம் அருளும் பத்ரகாளியம்மன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
12:08

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோவில்கள் அதிகமுள்ள கிராமம் மன்றாம்பாளையம். இங்கு, கோபுர சிற்பங்களுடன் காணப்படும் பத்ரகாளியம்மன் கோவில், 300 ஆண்டுகள் பழமை யானது; கருங்கற்களால் அமைக்கப்பட்டது.கருங்கற்களால், 32 துாண்கள் அமைக்கப்பட்டு, கருவறைக்கு மேல், 10 அடி உயர கோபுரத்தில், அனைத்து தெய்வ சிற்பங்களும் வடிவமைக் கப்பட்டு, நான்கு பக்கமும் காவல் தெய்வங்களின் சிலைகள் உள்ளன.

கற்பகிரகத்தில், ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட, ஐந்தடி உயர அம்மன், சிங்கத்தின் மேல் எட்டு கரங்களுடன் வடக்கு நோக்கி கம்பீரமாக வீற்றிருந்து, அருள்பாலிக்கிறார். அம்மனின் காலடியில் மூலவர் சிலை உள்ளது.கர்ப்பகிரகத்துக்கு வெளியே, அம்மனின் இடது பக்கத்தில், தனி சன்னதியில் விநாயகரும், வலது பக்கத்தில் கன்னிமார் கருப்பராய சுவாமியும், எதிரே சிங்க வாகனமும் வீற்றிருக்கிறது.

ஆனி திருமஞ்சனம், ஜோதிவழிபாடு ஆகிய விழாக்கள் கோவிலில் சிறப்பாக நடக்கிறது. இப் பகுதியில் அதிகம் வாழும் கவுண்டர், செட்டியார் சமூக மக்கள் பத்ரகாளியம்மனை குல தெய்வமாக வழிபடுகின்றனர்.கோவிலின் ஸ்தல விருட்சமாக, வேப்பமரம் உள்ளது.

கோவிலில், அம்மனை மனமுருகி வேண்டி, சுப நிகழ்ச்சிகளுக்கு பூ கேட்பது பிரசித்தி பெற்றது. கோவிலில், மூன்று கால பூஜை நடக்கிறது. கடந்த, 40 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்க வில்லை. திருப்பணி மேற்கொள்ள அம்மன் பூ கொடுத்துள்ளதால், திருப்பணிகளை துவங்க, கோவில் கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் இன்று வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar