பதிவு செய்த நாள்
20
ஆக
2019
12:08
உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆவணி மாதம் மகா சங்கடஹர சதுர்த்தி விழா நேற்று 19ம் தேதி நடந்தது.
இதையொட்டி, கோவிலில் மகா கணபதி ஹோமம், 108 வலம்புரி சங்கு பூஜைநடந்தது.தொடர்ந்து, சுவாமிக்கு சங்காபிஷேகம் மற்றும் யாக தீர்த்த அபிஷேகங்கள் நடந்தன. பின்னர், 10 கிலோ சந்தனத்தால், அலங்கரிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.மாலையில், மூஷிக வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, திருவீதியு லா நடந்தது. சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜையையொட்டி, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.