Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரமடை அரங்கநாதர் கோவிலில் ரூ. 26 ... திருமழபாடியில் மார்ச் 31ல் நந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா: குட்டைத்திடல் ஏலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2012
11:03

உடுமலை : கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, குட்டைத்திடல் ஏலம் இன்று தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, வரும் பக்தர்களை மகிழ்விக்கும் வகையில், குட்டைத்திடலில், கடைகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களாக சிறிய ராட்டினங்கள், மிருக காட்சி சாலைகள் அமைக்கப்படுவது வழக்கம். இதற்காக வருவாய்த்துறைக்கு சொந்தமான குட்டைத்திடல் பகுதி ஏலம் விடப்படும். இந்தாண்டும் குட்டைத்திடல் ஏலம் இன்று(30ம் தேதி) காலை 11.00 மணிக்கு உடுமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நல்லசாமி தலைமையில் நடைபெறுகிறது. கடந்தாண்டு ஆறு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டது. இந்தாண்டு அதை விட 10 சதவீதம் தொகை அதிகரிக்கப்பட்டு ஏலம் கோரப்படும். தாசில்தார் நல்லசாமி கூறியதாவது: குட்டைத்திடலில், 0.91 ஏக்கர் காலியிடம் தேர்த்திருவிழாவையொட்டி, ஏலம் விடப்படுகிறது. வரும் ஏப்., 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை அந்த இடத்தில், கேளிக்கைக்கு, விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், சிறிய ராட்டிணங்கள், மிருக காட்சி சாலை போன்றவைகள் அமைத்து பயன்படுத்திக்கொள்ள உரிமம் வழங்கும் வகையில், நாளை (இன்று) ஏலம் நடத்தப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஏலத்திற்கான அச்சாரத்தொகை 25 ஆயிரம் ரூபாயினை ஏலம் நடைபெறுவதற்கு முன்னர் செலுத்த வேண்டும். உயர்ந்த பட்ச தொகைக்கு ஏலம் கோரும் தொகையை (அச்சார தொகை நீங்கலாக) உடனே செலுத்த வேண்டும்; அரசு நிர்ணயம் செய்யும் மதிப்பிற்கு குறைவாக ஏலம் கோர அனுமதிக்கப்பட மாட்டாது. ஏலம் ஊர்ஜிதம் செய்வது சம்மந்தமாக உடுமலை வருவாய் கோட்டாட்சியர் முடிவே இறுதியானது. ஏலத்தினை ரத்து செய்யவோ, தள்ளி வைக்கவோ ஏலம் நடத்தும் அலுவலருக்கு உரிமை உண்டு, என தாசில்தார் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar