Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை வீரன் அங்கதன் அங்கதன்
முதல் பக்கம் » பிரபலங்கள்
முருகனின் சகோதரி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 மார்
2012
04:03

முருகப் பெருமானின் கையில் இருக்கும் வேல், ஜோதி எனும் அக்னியாகவே அழைக்கப்படுகிறது. புராணத்தில் கூறியுள்ளதுபோல் சிவபெருமானின் நெற்றிக்கண்ணாகிய ஞானத்தில் பிறந்தவர்தான் கார்த்திகேயன் எனும் ஆண் பால் அக்னி. கார்த்திகை எனும் ஆறு பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் ஆனார். இதேபோன்று பார்வதிதேவியான சக்தியின் நெற்றியிலிருந்து வெளிப்பட்டவள்தான் கார்த்திகாயினி எனும் பெண் பால் அக்னி. கார்த்திகாயினி எப்போதும் தன் சகோதரனுடன் இருக்கவேண்டி, தன் தாய் சக்தியால் சக்தியூட்டப்பட்ட வேலாக மாற்றப்பட்டு கார்த்திகேயனின் கையில் கொடுக்கப்பட்டாள். தை மாத பூச நட்சத்திர நாளில் முருகன் கையில் வேலாகக் கொடுக்கப்பட்டதால் இவள் பெயர் பூஷாணா என்றும், வடமொழியில் வேல் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

தைப்பூச நாளை அக்னியின் நாள் என்றே கூறுகின்றனர். பூசம் (புஷ்யம்)என்ற சொல்லுக்கு சக்தியூட்டுதல் என்ற பொருளுண்டு. பூச நட்சத்திர நன்னாளில், அக்னியான சக்தி தன் மகளான கார்த்திகாயினியை தன் குமாரன் கையில் கொடுத்து அசுரனான சூரபத்மனை வதம் செய்தார். சூரபத்மன், சந்திர குடும்பத்தைச் சார்ந்த மதியைப் பாதிக்கக்கூடியவன் என்றும், இவன் பொறாமை, கோபம், காமம், இச்சைகளைக் கொடுக்கும் மதிகேடன் என்றும், வேதவியாசர் எழுதிய ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. தைப்பூச நன்னாளில், மக்களும் தங்கள் மனங்களிலுள்ள பொறாமை, கோபம், காமம், இச்சைகளைக் களைந்து, அக்னி எனும் வேலின் துணையுடன் முருகனின் அருளால் காக்கப்படுகின்றனர். இங்கே அக்னி வேலாக இருந்து மக்களைக் காக்கின்றது. இங்கே அக்னியான சகோதரி, தன் சகோதரனின் கையால் தாங்கப்படுகின்றாள். குடும்பத்தில் பெண் ஆகிய சகோதரியை சகோதரன் தன் கைகளால் வாழ்நாள் முழுவதும் தாங்கவேண்டும் என்பதே வாழ்வியல் தத்துவமாக முருகன் கை வேல் உணர்த்துகின்றது.

 
மேலும் பிரபலங்கள் »
temple news

குணவதி மார்ச் 08,2017

ராமர், யுத்தத்தில் தமது கையால் அரக்கர்கள் பலர் மடிந்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரை சென்றார். ... மேலும்
 
temple news

துகாராம் பிப்ரவரி 03,2017

பாண்டுரங்க பக்தரான துகாராம் நித்தமும் பஜனை செய்வார். மக்கள் கூட்டம் கூட்டமாக இவர் பாடலைக் கேட்க ... மேலும்
 
temple news

விராதன் டிசம்பர் 14,2016

ராம -லட்சுமணர்கள் சீதா தேவியுடன் தண்டகாரண்யம் வருகின்றனர். விராதன் என்ற அரக்கன் சீதையைத் தூக்கிக் ... மேலும்
 
temple news
திருப்பதிக்கு அருகில் தரிகொண்டா கிராமத்தில் காணல கிருஷ்ணா -மங்கமாம்பா தம்பதியருக்கு 1730 ல் பிறந்தவள் ... மேலும்
 
temple news

உபகோசலன் அக்டோபர் 18,2016

சத்திய காம ஜாபாலர் சிறந்த தத்துவஞானி. அவர் சீடர்களில் பலருக்கு பிரம்ம ஞானத்தை உபதேசித்திருக்கிறார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar