திருப்புத்துார் : பிள்ளையார்பட்டி வினாயகர் கோவிலில், சதுர்த்தி பெருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி வினாயகர் கோவிலில், சதுர்த்தி பெருவிழா, ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும்.நடப்பாண்டு விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காலை, 10:00 மணிக்கு பூஜை துவங்கியது. திருவீசர் சன்னதி முன், உற்சவ வினாயகர், மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர்ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர். கொடி மரத்தினருகே அங்குசத்தேவர், சண்டிகேஸ்வரர், கொடிபடம் எழுந்தருளல் நடைபெற்றது.