பதிவு செய்த நாள்
25
ஆக
2019
03:08
திருச்சி:திருச்சி, சர்க்கார்பாளையத்தில் உள்ள, காசி விஸ்வநாதர் கோவிலில், சூரிய வழிபாடு நேற்று நடந்தது.
திருச்சி - கல்லணை சாலையில், காவிரி ஆற்றின் தென் கரையில் உள்ள, சர்க்கார்பாளையத்தில், கரிகால் சோழனால் கட்டப்பட்ட, காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில், மூன்று நாட்கள், காலைப் பொழுதில், இக்கோவிலில் உள்ள, மூலவர் காசி விஸ்வநாதர் மீது, சூரிய கதிர்கள் நேரடியாக பதியும். இந்த நிகழ்வை, சூரிய வழிபாடு என, புராணங்கள் குறிப்பிடுகின்றன.நேற்று காலை, 6:00 மணிக்கு, சர்க்கார்பாளையம், காசி விஸ்வநாதர் கோவிலின் முன் மண்டபத்தில் பதிந்த சூரிய கதிர், படிப்படியாக நகர்ந்து, கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது பதிந்து, நெற்றியில் திலகம் இட்டது போல் காட்சியளித்தது.அப்போது, ஏராளமான பக்தர்கள், ஓம் நமசிவாய மந்திரம் சொல்லி, காசி விஸ்வநாதரை வழிபட்டனர்.இந்த சூரிய வழிபாடு, 26ம் தேதி வரை நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.