அலங்காநல்லுார், : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. கிருஷ்ணர் சன்னதியில் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. பின் சர்வ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
திருப்பரங்குன்றம்: திருநகர் சித்தி விநாயகர் கோயில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூமா தேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. மாலையில் ஊஞ்சல் சேவையில் உற்ஸவர்கள் அருள்பாலித்தனர். ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் பைரவருக்கும், திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி கிருஷ்ணன் கோயிலில் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் கால பைரவருக்கு வடைமாலை சாத்துப்படியானது. மாலையில் விளக்கு பூஜை நடந்தது.